Monday, December 28, 2015

ஆதியும் அந்தமும்

என்மீது தவறேதும் இருப்பீன்
என்னை நானே தண்டித்து கொள்கிறேன்

பிறகு என்னிடமே பாவமன்னிப்பு கோரி
என்னை நானே மன்னித்து கொள்கிறேன்

என்னகுள்ளே அகிலத்தையும் சுருட்டி புதைத்து
நானே ஆதியும் நானே அந்தமுமாகிறேன்



எட்டா குணம்

அது எட்டா கனி என்று தெரிந்தும்
அதை எட்டி பறிக்க துடிக்குது மனம்

எட்டி விட்ட பின்பு
அதை
எட்டி (உதைக்குது) எறியுது குணம்



Tuesday, December 22, 2015

கோபம் கொள்கிறாள்

தனிமையில்
என்னை பொதுவாய் வைத்தேன்
பொது சிந்தனையுள் என்னை தைத்தேன்
சம நீதி கண்டெடுத்தேன்
தன்னலம்மற்று கிடந்தேன்

எங்கிருந்தோ வந்தாள்
சுயநலம் கொண்டாள்
என்னை திசை மாற்ற முயன்றாள்
முடியவில்லை அவளால்

அதீத காதலால் என்மேல் கோபம் கொண்டாள்
என்னை கடத்தி தன் வசம் வைத்து கொண்டாள்
அவளிடமிருந்து தப்பிக்க மனமில்லை இருந்தபோதும்
கொள்கையை விட்டு கொடுக்கவும் மனமில்லை
மாட்டிக்கொண்டேன் சரியாக 
என்னை நானே அவளிடம் சிறை வைத்துக்கொண்டேன் முறையாக.





மாமர கிளைதனில்

மாமர கிளைதனில்
நான் படுத்துறங்க
சல சல வென விசும் காற்றில்
மா இல்லை வாசம் என்னை தழுவிக்கொள்ள
ஒரு சிறு தூக்கம் போட்டேன்
சிறுவயதில்


Sunday, December 20, 2015

கொல்லும் வினாக்கள்

என்னை தேடி வரும் வினாக்கள்
என்னை கொல்லாமல் கொல்லுதே

என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை
எப்படி கரை சேர்ப்பேன் என்று என் மனம் கேட்கிறது

நாளை காலை உணவுக்கு எங்கே போவது
என்று இந்த இரவு என்னை கேட்கிறது

எப்படி கடனை திருப்பி கொடுப்பேன்
இன்று குட்டி போட்ட வட்டி கேட்கிறது

காசில்லாமல் காதலிகளை கைவிட்டேன்
நீ ஆம்பளைய என்று காமம் கேட்கிறது

யார் எவ்வளவு கேவலமாக  கேட்டாலும்
எனக்கு  என்ன என்று செல்கிறேன்
நீ பைத்திமா என்று ஊர் கேட்கிறது






i-Robot நான் இயந்திரன்

நான் சுவாசிக்க Oxygen தேவை இல்லை
என்னுள்ளே இரத்த ஓட்டம் ஓடவில்லை

வில்லின்றி அம்பாக பறப்பேன்
விதை இன்றி விருட்சமாக வளர்வேன்

.................................will be Continued................i-Robot நான் இயந்திரன்



Thursday, December 17, 2015

கண்ணா கட்டி காட்டுல விட்டா

கண்ணா கட்டி காட்டுல விட்டா
கைய கட்டி கடலுல விட்டா


என்ன சொல்லி நானும் பாடுவேன்
இப்படியே தான் நொந்து சாகுறேன்

தன்னே தனே தான ந ந நா.........ஆ......
தன்னே நானே நானே ந நா......ஆ......





Tuesday, December 15, 2015

உடுருவி வருகிறாள்

அவள் என்னை விட்டு சென்றதும்
அவள் பின்னே என் கவிதைகளும் சென்று விடுகிறது

மறுகணம்
அவள் அதை சுமந்துகொண்டு
என் நினைவுகளோடு
என்னை சுற்றி
வளம் வருகிறாள்
-----------------------------------------------
மொழிகள் உயிரினுள் உடுருவி
கவிதைகளால் எங்களை பிணைத்து கொண்டது
----------------------------------------------------------


Friday, November 27, 2015

விடைகொடு அன்பென

என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு

==============================================
(மாற்று)
என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை உன் மடிமேல்

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு இதயம்தனில்

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு அன்பென




காதல் உலகிலே

காதல் உலகிலே
கவிதை வடிவிலே
பெண்ணொருத்தி
வந்தாலே
என்னை
முன்னிறுத்தி சென்றாலே

ஏனோ துடிக்கிறேன்
நாணம் படிக்கிறேன்
தன்னாலே அவள் கண்ணாலே

காதல் கொண்டேனே
அவள்மேல்
காதல் கொண்டேனே

to be continued.............


நான் தேடிய பெண்

நான் தேடிய பெண் இவள்தானோ
என் எதிர்கால துணைக்கோள் இவள்தானோ

என் எண்ணத்தை கவிதையாய் தோல்லுரித்த
அழகு தேகம் அவள் மேனி தானோ

to be continued............

Tuesday, November 24, 2015

என்னை மன்னித்துவிடு

என்னவென்று சொல்வது
நீ இல்லாத நொடிகள்
வேதனையீன் இரணமாய் என்மேல் பாய்கிறது
உன்னை காணமல்
உள்நெஞ்சம் பாலைவனமாய் காய்கிறது

நீ எங்கோ இருக்கிறாய்
ஆனால்
இங்கே என்னை வாட்டிவதைக்கிறாய்

நீ இல்லாத பொழுதுகளை
சகித்துக்கொண்டு வாழவும் வழி தெரியவில்லை
வலியில் இருந்து மீளவும் வழி தெரியவில்லை

ஏனோ கோபங்கள் உன்மேல்
தண்டனை செலுத்திகொள்கிறேன் என்மேல்

மீண்டும் வந்துவிடு
தவறேதும் இருப்பின்
என்னை மன்னித்துவிடு

Sunday, November 22, 2015

முதல் காதல் முத்தம்

முதல் காதல்
மதல் முத்தம்
எல்லாம் அத்துடன்  இறுதியானது
ஏனோ என்னிடம் ஆசை காட்டி
என்னை மோசம் செய்தது

நிலவை கட்டி இழுக்காத வான்வெளி
மழை துளி சிதறாத புல்வெளி (கவி துளி)
மலரை வண்டு மொய்க்காத கவிதைகள்

எல்லாம் தன்னாலே வந்து எனக்கு சொந்தம்மானது


Sunday, November 15, 2015

கனவுகளாய் களைகிறேன்

உன் நினைவு தனை கலைத்து
நான் கனவுகளாய் கலைகிறேன்


Saturday, November 7, 2015

காதல் விலை

காதல் என்ன விலை
சொல்லுங்கள்
தருகிறேன் 
என்னை

Thursday, November 5, 2015

காதல் மழை

காதல் மழை தொடர்கிறது
கவிதையாய்

காதல் காலம்

விடியும் முன்பு விழித்து கொள்கிறேன்
நாட்காட்டியையும் நாழிகையையும்
சோதித்து கொள்கிறேன்
உன் புகைப்படத்துடன் கண் பதித்து கொள்கிறேன்

சந்தித்ததை எண்ணி சிந்திக்கிறேன்
சிந்தித்ததை கொண்டு உன்னை சந்திக்கிறேன்

ஒரு சில நொடிகள்
முகம் பாராமல் விழி நோக்காமல்
எனக்குள் வெட்கி நாணுகிறேன்

நாம் சேர்ந்து செல்கையில்
என் விரல்களால் உன் விரலை வருடி கொள்ள முயல்கிறேன்
முடியாத பட்ச்சத்தில் கண்களால் காதல் பொழிகிறேன்

இரவெல்லாம் கண்விழித்து
என்னிலையை குறுந்தகவலாய் அனுப்புகிறேன்

அதை முத்தமிட்டு பெருந்தகவலாய்
நீ திருப்பி என்னிடமே அனுப்புகிறாய்

காலம் மறந்து காதல் செய்கிறோம்
காலங்கள் கடந்தும் காதல் வளர்க்கிறோம்



விடமாட்டேன் உன்னை

உன்னை அணு அணுவாக
ஆராய்ந்து
என்னுள்  ஒரு நுட்பம் செய்துள்ளேன்
நீ சிணுங்கினாலும் சரி
இல்லை நீ மருகினாலும் சரி
உன் ஆழ்மனதை தொட்டு
நான் பாடம் படித்துவிடுவேன்
உன் தேடலை கண்டுகொண்டு
தேவைகள் நான்யென நானே
கொண்டுவந்து சேர்ப்பேன்
உன்முன் நான் காட்டிய நடை வேறு
உண்மையில் நான் உடுத்தும் உடை வேறு
எள் என எண்ணிவிட்டாய் என்னை
என்னை தாண்டி செல்ல விடமாட்டேன் உன்னை

காதல் எரிகிறது

அவன் காதல் அவன் புறம் இருக்க
என் காதல் என் புறமிருக்க
இடையில் எங்கள் காதல் பற்றி எரிகிறது
காலத்தால்
-------------------------------------------------------------
அவன் சொல்லாத காதல் அவன் புறம் இருக்க
என் காதல் என் புறமிருக்க
இடையில் எங்கள் காதல் பற்றி எரிகிறது
காலத்தால்
--------------------------------------------------------------


நல்லா இருக்கியா

பின்நாளில்
நல்லா இருக்கியா
என்ற வார்த்தைகளோடு
உறவு முடிந்து விடுகிறது


Wednesday, November 4, 2015

வெறும் கனவுதான்

நான் கனவுதான்
நீயும் கனவுதான்
என்னோடு சங்கமித்தால் கனவுதான்
இல்லையேல் வெறும் கனவுதான்

நான் கனவுதான்
நீயும் கனவுதான்
என்னோடு நீயும் சங்கமித்தால் இருவரும் கனவுதான்
இல்லையேல் இருவரும் வெறும் கனவுதான்

Tuesday, November 3, 2015

ஆசையாய்

கிடைக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறோம்
ஆசை பட்டதை தேடி அனுதினமும் அலைகிறோம் (ஓடுகிறோம்)
இறுதிவரை அது கிடைப்பதே இல்லை
கிடைத்ததை வைத்து கொள்ள மனம் இடம்கொடுப்பதுமில்லை
அசை நிராசையாய் தொடர்கிறது
ஆசையாய்


என்னையே பிடிக்கவில்லை

சில நேரம் செய்த தவறுக்காக வருந்துகிறேன்
மறு நேரம் என்ன தவறு செய்துவிட்டேன் என வினவுகிறேன்

நல்லதுதானே செய்கிறேன் 
உண்மையைத்தானே பேசுகிறேன்

உள்ளதை தருகிறேன்
உள்ளத்தை தருகிறேன்
உள்ளுணர்வை அன்பென பொழிகிறேன்

என்னை உணர்ந்துகொள்ள யாருமில்லை 
என்னை ஏனென்று கேட்டக நாதியும் இல்லை

ஏனோ கோபங்கள் என்மேல்
என்னையே எனக்கு பிடிக்கவில்லை உங்களால் !.


Saturday, October 31, 2015

என்னை கடந்துவிட்டேன்

என்னுள் நுழைந்து
எனக்குள் என்னை
நான் கடந்துவிட்டேன்


எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம் என்று எதுவும் கிடையாது
நிகழ்கால திட்டங்களை சரியாக வகுத்தால்
எதிர்காலம் சிறப்பாக அமையும்


நாம் இல்லை

நாம் உறவாடிய தடங்கள் மட்டும் காத்துக்கிடக்கிறது
நாம் மட்டும்  இல்லை உறவாடிகொள்ள



Wednesday, October 28, 2015

எல்லாம் கவிதைகளே

என்னுள் உள்ள
கோபதாபம்
காதல் காமம்
ஆசை நிராசை
ஆணவம் ஆகங்காரம்
சாந்தம்
சம்பந்தம்
சம்மதம்
சமாதானம்
எல்லாம்
கவிதைகளே

அறிக்கை அரசியல்

தான் அறிந்துள்ளேன் என்பதும்
பிறர் அறிய வேண்டும் என்பதும்
அறிந்தோர் செயல் பட வேண்டும் என்பதும்
செயல்பாடுகளால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும்
அரசியல் அறிக்கையாக வெளிவர வேண்டும்

மாறாக

பிறர் மீது வீண்பழி சுமத்தி
அதன் பொருட்டு தாம் விளம்பரம் தேடிக்கொள்வதும்
அனைத்து விசியங்களிலும் தலையிட்டு அறிக்கை வெளியிடுவதும்
அனைத்து ஊடகங்களிலும்  தினம் அறிக்கை நிமித்தம்  தலைகாட்டுவதும்

இவ்வாறாக மக்களை அன்றாடம் அறிக்கை வாயிலாக சந்திப்பதே
அறிக்கை அரசியல்

ஹைக்கூ :

செயல்பாடுகள் இன்றி வெறும் சொற்காளால் நிறைந்தது
அறிக்கை அரசியல்


Tuesday, October 27, 2015

ஒரு கவிதை

உனக்கு ஒரு கவிதை
எனக்கு ஒரு கவிதை
நமக்கு ஒரு கவிதை
போதும்
ஊருக்கு ஒரு கவிதை
உலகுக்கு ஒரு கவிதை
எல்லாம் நமக்கு எதற்கு
================================================
அது கவிதையின் பாடு
பாடட்டும் ஒரு கவிதை


Monday, October 26, 2015

கண்ட நாய் கவிதை

எனது கவிதையை
ஒரு ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்
எதையும் கண்டுகாதவன் போல் கவிதையை படித்தான்
படித்து முடித்துவிட்டு
கண்ட நாய் எல்லாம் கவிதை எழுதுது என்றான்
பாராட்டுக்காக காத்திருந்த
எனக்கு தூக்கிவாரி போட்டது
இதயம் துடிதுடித்து போனது

நான் கண்ட நாயானேன்
கண்டவன் பார்வைக்கு

Sunday, October 25, 2015

எதுக்காகவோ இருக்கிறேன்

எல்லாம் என்னை விட்டு பொய்விட்டது
இன்னும் என்னவெல்லாம் போகபோகிறதோ ?

தோல்விகள் மட்டுமே தொடர் கதையாக இருக்கிறது
உறவும் நட்பும் தொல்லைகளாக இருக்கிறது

ஏன் இன்னும் நான் இருக்கிறேன்
என்ற கவலை
என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது

இன்னும் எதுக்காகவோ நான் தேவைபடுகிறேன்
அது எதுக்காகவோ என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை


Wednesday, October 21, 2015

பட்டுநூல்காரி

கிருஷ்ணா லீலாவின் முடிவு அவள்
சோம்நாத் கோவிலின் ஆரத்தி தீபம் அவள்

ஆர்யா வம்சம் அவள்
நாடோடி கூட்டம் அவள்

முஹமத் கஜினியீன் அடிமை அவள்
மராத்தியர்களிடம் தஞ்சம் அடைந்தவள் அவள்
விஜயநகர தேசத்தின் அழைப்பிதழ்  அவள்
ராணி மங்கமாவின்  குறிப்பு அவள்

புனித நூல் நெய்பவள் அவள்
பட்டுநூல் தைப்பவள் அவள்
பட்டுநூல்காரி அவள்

(Image Created by Myself "Kathala Va da")

(Unknown Language)

Monday, October 19, 2015

கனவு கவலை

அவள் கனவில் நானில்லை
ஏனில்லை என்ற கவலை
என் மனதை துளைத்து
புடைத்து வறுத்தெடுக்கிறது

இன்று அவள் என் கனவில்
என் கனவில் நீ
உன் கனவில் நானில்லை
என்ற கவலை
என்று ஏங்கினாள்
என்னை தாக்கினான் (தாங்கினாள்)
அவள் கனவில்

கனவை கலைத்து
விழித்தெழுந்தேன்


Friday, October 16, 2015

இன் பக்கம்

உன் முன்பக்க கதை எனக்கு எதற்கு
அதை 
உன் பின்பக்கம் வீசிவிட்டு வா என்னோடு 
இன் பக்க கதை எழுத........இன்பத்தின் சுவை ததும்ப.

================================================

வாடி...... வஞ்சி கிளி தேடி....... வந்தேனடி 
காதல் கதை வானம் தொட்டு சொல்ல .
நேரம்....... வந்ததடி மாலை.... தந்தேனடி 
தேடல் இனி நம்மை  விட்டு செல்ல.....



Monday, October 12, 2015

இன்பமான வலி

பூக்களின் மகரந்த வேலிக்குள் நீ இருக்க
முற்களின் வேலிக்குள் நான் சிக்கி கிடக்க
மலர்ந்தது இன்பமான வலி



Thursday, October 8, 2015

சோளக்காட்டு பொம்மை

கண்விழித்து பாராமல்

தலை சாய்த்து ஓயாமல்

கை கால் சற்றும் அசராமல்

கூலி மிகுதி கேட்டகாமல்
கூனி குறுகி கும்பிடு போடாமல்

வெயிலால் சுட்டு
மழையால் நனைந்து
காற்றால் துடைத்து

யாருக்காகவோ எதுக்காகவோ
காத்து நிற்கிறேன்
யாருமில்லாத  இடத்தை
யாருக்காகவோ காவல்காக்கிறேன்

சோளக்காட்டு பொம்மையாக





சிதைக்கப்படுகிறேன்

சிறையில் இருக்கிறேன்
சிறகொடிந்து கிடக்கிறேன்
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்

சினம்கொண்ட சிறுமலரால்
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்

====================================

                (காதல்)
சிறையில் இருக்கிறேன்
               (காயத்தால்)
சிறகொடிந்து கிடக்கிறேன்
               (அன்பின்)
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
                (பதிலுக்கு)
சினம்கொண்ட சிறுமலரால்
                 (மேலும்)
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்

=======================================



Tuesday, October 6, 2015

மன கோவில்

மன கோவிலில் தெய்வங்கள் (விக்கிரகங்கள்) கிடையாது
சத்தியமே ஆராதனை
மன்னிப்பே பரிகாரம்
நேர்மையே வேதம்
ஞானமே அருள் வாக்கு
அன்பே ஆசிர்வாதம்


Monday, October 5, 2015

நோடிகிறேன்

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
=============================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்

====================================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என் காதலின் வலியை கூட்டிகொண்டேன்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்



Saturday, October 3, 2015

சிதைத்துகொள்கிறேன்

இருளில்லிருந்தேன்
நீ  தீபம் ஏற்றினாய்
ஒளிர்கிறேன்
மெழுகென உருகுகிறேன்
என்னையே சிறுக சிறுக சிதைத்துகொள்கிறேன்
எனக்கே நான் எதிரியாகிறேன்



Wednesday, September 30, 2015

நீ வருவாய் என

நீ வருவாய் என
துயில் கலைத்தேன்

துங்கா வனம் என
காத்து கிடந்தேன்


Sunday, September 27, 2015

புலி வேஷம்

யாரும் கண்டுகொள்ளாத காலம்
ஒன்று வந்தால்
மனம் சோர்வுற்று போகும்
உடல் தளர்ந்து போகும்
ஏக்கம் ஆளை கொல்லும்

உள்ளம் வலி மீள வழி தேடும்
விழி பிதுங்கி ஆற்றல் பதுங்கி கொள்ளும்

வேண்டாம் இன் நிலை
மாறட்டும் இன் நிலை


அனுபவத்தை தொகுத்துகொள்
மனதுக்கு ஒப்பனை இட்டுகொள்

பதுங்கிய நிலையில் மெல்ல நகரு
இலக்கில் கண் வைத்துகொள்
காலம் கைகூடும் நேரம்
இரையை பாய்ந்து கவ்விக்கொள்

கொள் புலி வேஷம்

ஒன்றும் தெரியாதவள்

நினைவுகள்  அவளை  நாடுது
சிந்திக்க தெரியதவளிடம்

மனம் மன்னிப்பை தேடுது
மன்னிக்க தெரியதவளிடம்

உடல் ஏக்கத்தில் வாடுது
அணைக்க தெரியதவளிடம்




Thursday, September 24, 2015

உளறுகின்றேன்

தமிழ் போதை
தலைக்கேறிய நிலையில்

கனவுகள்
விட்டுசென்ற நினைவில்

கவிதை
என்ற பெயரில்

ஏதேதோ
உளறுகின்றேன்
உன் நினைவில்



Friday, September 11, 2015

நீல வானே

நீல வானே அருகினில் அருகினில்
வந்தது ஏனோ

அவள் என் கனவினில் வந்த காரணம் தானோ

குளிர்  காற்றே மிதமாய் என்மேல்
வீசுவது ஏனோ

அவள் என்னை  கடந்து செல்வதினாலோ


.................... to be continued

வண்ணங்களை துளிர் கொண்டு கவி தீட்டவா



Thursday, September 10, 2015

உன்னை சேரவே

உன்னை சேரவே
தினம் உன்னை காண்கிறேன்

உன் கண்ணை கானவே
கலர் கனவாய் யாகிறேன்

(பாடல்) to be contined.................

இசை நான் மொழி நான்  கவியும் நான்


மலரும் நான் தேனும் நான் மொய்க்கும் வண்டும் நான்




Monday, September 7, 2015

காத்துகிடக்கிறேன் கண் அசைவுக்காக

என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .

நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்

மாற்று

என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது

நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .



மாற்று

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

என் தேடல் முடிவற்று செல்கிறது 
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது 

நெருங்கிவிட்டோம் 
மனதளவில் 
இனைய மறுக்கிறோம் 
உடலளவில் 

ஏன் என்ற குழப்பம் 
என்னை நிரப்புகிறது 

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்

உன் கண் அசைவுக்காக

Saturday, September 5, 2015

நினைவலைகள்

ஓர் குரலாய்
இதயம் ஒலிக்கும் ஒருதலை காதல்கள்

பிரியா முகமாய்
என் மேல் நனையும் மழை துளிகள்

பாதம் தாங்கி
என்னை கடக்கும்  புல் துளிர்க்கும் பாதைகள்

நிற்கிறேன் ஓர் புறமாய்
நிரந்தரமாய் என்னுள் நீ நீங்கா நினைவலைகள்


Monday, August 31, 2015

காதல் களோபரம்

என்னிடம் அவளிடம் சொல்லபடாத
செய்திகளும்
அவளிடம் என்னிடம் சொல்லபடாத
செய்திகளும்
ஏராளம்
சொல்லிவிட எங்கள்
மனதில் இல்லை
தாராளம்
இருந்தபோதும்   எங்களுக்கு
இடையே
காதல் என்னும்
களோபரம்

Saturday, August 29, 2015

மனித ஜாதி

அண்டம் என்ன ஜாதி
அதிலுள்ள சூரிய குடும்பம்  என்ன ஜாதி
அதிலுள்ள பூமி என்ன ஜாதி
அதிலுள்ள  நிலமும் மலையும் கடலும் வானமும் என்ன ஜாதி
அதிலுள்ள விலங்கும் பறவையும் மீனும் என்ன ஜாதி
அவைகளை எல்லாம் கேளாமல் என்னை கேட்கிறாய் என்ன ஜாதி ?
நான் ஒரு மனித ஜாதி
அதுவே பொது நீதி

Wednesday, August 26, 2015

காதலை உணரவில்லை

அவள் பேசாத பொது
என்னுடன் பேசியதை எண்ணுகிறேன்

அவள் முகம் பாராத பொது
பார்வையற்று அலைகிறேன்

அவள் என்னை வெறுக்கும் பொது
வெறுமையை உணர்கிறேன்

அவள் இல்லாத பொது
தனிமையில் தவிக்கிறேன்

பேசுகிறாள் பேசாததைபோல்
பார்க்கிறாள் பார்க்காததைபோல்
வெறுக்கிறாள் வெறுக்காததைபோல்
இருக்கிறாள் இல்லாததைபோல்


என்னை தேட செய்கிறாள்
தேடிப்போக வாட செய்கிறாள்
அவளிடம் நான்  உணர்ந்த காதலை
அவள் என்னிடம்  இன்னும் ஏன் உணரவில்லை ?



Monday, August 24, 2015

வலி உழுதிட

நான்
விளைநிலம் உழுதிட 
கடன் பெற்றேன்
விதைகள் வாங்கிட 

விதை விளைந்தது 
வேர்வை துளிகளில்

வானம் பார்த்தேன்
கைகள் விரித்திட

மழை வேண்டி 
படையல் இட்டேன் 
பூமி நனைந்திட 

நாள்தோறும் கண்ணீருக்கு
மடகு கட்டினேன்
கண்கள் குளிர்ந்திட

கண்மணியென கண்காணித்தேன்
பயிர்கள் விளைந்திட

ஆட்கள் கிடைக்கவில்லை 
அறுவடை செய்திட

விலை போகவில்லை
அரசு கொள்முதல் செய்திட

நிலத்தை விற்றேன்
வாங்கிய கடனை அடைத்திட 

எனக்கு தெரியாது 
வேறு தொழில் செய்திட

வழி தேடுகிறேன்
வலி மறந்திட