Tuesday, November 26, 2013

தேடி தேடி பார்க்கிறேன்

தேடி தேடி
பார்க்கிறேன்

தேய்பிறை போல்
தேய்கிறேன்

விழி ஓரம்
நீர் துளி
வழிந்தொடுதே......
வழிதேடுதே..........

இரு தோள்களில்
உறவாடுதே

உயிர் நோவுதே........


Saturday, November 23, 2013

என்னை மறந்து விட்டேன்



மறந்து விட்டேன்
என்று
நினைத்து விட்டாள்
என்னை

இதழ்களில் அவள் பெயர்
மொழிய வைத்தாள்

விழிகளில் நீர் துளி
பெருக வைத்தாள்

கடந்து செல்கிறாள்
கண்டும் காணாமல்

களவுக் காரி
கள் நெஞ்சு காரி

(ஊமை மாயம் செய்கிறாள் )

Tuesday, November 12, 2013

துறவி

அதிகாரம் கலைத்து விட்டேன்
ஆட்டத்தை முடித்துக்கொண்டேன்

அரியணை துறந்து
அடிமையாக மாறினேன்

தோல்விக்கு முன்
துறவறம் புகுந்துகொண்டேன்


Friday, November 8, 2013

அவளை இரசித்தேன்

அவள் பின்னிய கூந்தலில்
சிறு பூங்காடு

நெற்றியில் சரிந்து விழும்             
அந்த ஒற்றை முடி                            

சின்னச்சிறு பொட்டு
இமை மறைக்கும் அந்த ஓரப்பார்வை
மெல்லியப் புன்னகை

நகம் கடிக்கும் செவ்விய இதழ்
நாணிய தலை.
முனுகிய வார்த்தைகள்
மூடிய அங்கங்கள்

கோணி நின்று
கால்விரல் மடித்து
விழி நோக்குவாள்




Thursday, November 7, 2013

துணிவு

துணிந்தவனுக்கு துரும்பும் தோள்கொடுக்கும்
நலிந்தால் எறும்பும் காலால் மிதிக்கும்